மேட்டூர் அணையில் நீர்வரத்து 25,000 கனஅடியாக உயர்வு…! பாசனத்துக்காக கூடுதல் தண்ணீர் திறப்பு!
Mettur dam water level increased
சேலம்:
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 20,00 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்த மழையால் கா்நாடக அணைகள் நிரம்பும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணை மற்றும் நுகு அணை ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீா் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.
அதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 9-ம் தேதி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 90,000 கனஅடியாக உயர்ந்தது.
அடுத்தடுத்த நாட்களில் மழை சற்று குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறையத் தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,000 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந் நிலையில் இன்று நீர்வரத்து 5,000 கனஅடி வரை உயர்ந்து வினாடிக்கு 25,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 98.59 அடியாக உள்ளது. மேட்டூர் அணையில் தற்போது 63.02 டி.எம்.சி அளவு நீர் இருப்பு இருக்கிறது. அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது.