RETamil Newsதமிழ்நாடு
கொரோனாவால் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை : நடந்தது என்ன ?
Man hanged to death due to depression : Corona Tragedy
வேலூர் மாவட்டத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலூர் காட்பாடி ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஹரிபாபு,இவருக்கு வயது 50. ஹரிபாபுவிற்கு வாய் பேச இயலாது. இவர் மாவு அரைக்கும் தொழில் செய்து வருகின்றார். இவர் கடந்த இரு நாட்களாக பக்கத்து ஊரான சித்தூருக்கு சென்று வந்துள்ளார்.
இதனை கேள்விப்பட்ட அந்த பகுதியில் உள்ள மக்கள் அவரை 14 நாட்கள் தனிமையில் இருக்க சொல்லினர். மேலும் அவரிடம் மாவு அரைக்க வேண்டாம் எனக் கூறியதாகவும் சொல்லப்படுகின்றது.
இதன் விளைவாக ஹரிபாபு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனை அடுத்து காவல் துறையினருக்கு சம்பவம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காட்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.