GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு
டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் பெற கால அவகாசம் ..! ஜூலை 31 வரை நீட்டிப்பு
Licence renewal date extended
டெல்லி:
வாகன ஓட்டுநர் உரிமம் நீட்டிப்பு, இன்சூரன்ஸ் ஆகியவற்றுக்காக ஜூலை 31 வரையில்அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் வரும் 31 ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
ஊரடங்கால் வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, பொது போக்குவரத்து வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் கட்டுவது போன்றவற்றில் சிரமம் ஏற்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் ஆர்டிஓ அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந் நிலையில் மத்திய அரசு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து மோட்டார் வாகன சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜூன் 30 வரையில் செல்லுபடியாகும். தற்போது ஜூலை 31 வரையில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.