fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கருணை கொலை செய்யுங்கள்: உத்திரப்பிரதேச முதல்வருக்கு விவசாயி உருக்கமான கடிதம்!

ஆக்ரா:

பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தின்கீழ், தனக்கு கிடைத்த ரூ.2 ஆயிரத்தை சாமியார்  முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பியுள்ள விவசாயி, தன்னை கருணைக் கொலை அல்லது தற்கொலை செய்ய அனுமதி கொடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 39 வயதான விவசாயி பிரதீப் ஷர்மா.

உருளைக்கிழங்கு விவசாயியான இவர், விவசாயிகள் ஒருநாளை தள்ளுவது மிகக் கடினமாக உள்ளது என்று கூறி, பிரதமர் நிதியின் கீழ் விவசாயிகளுக்கு தரப்பட்ட முதல் தவணையான ரூ.2 ஆயிரத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளார்.

மேலும் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், விவசாயம் பொய்த்ததால், ரூ.35 லட்சம் கடனாளியாகிவிட்டதாகவும், தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வரால் முடியாவிட்டால், தற்கொலை செய்துகொள்ளவாவது என்னை அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் வலியுறித்தியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close