ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
ஆட்டோக்கள், டாக்சிகள் ஓடலாம்…! தமிழக அரசு அனுமதி!
Taxis, autos permitted in chennai airport, railway stations
சென்னை:
விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்கள் இயங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. கிட்டத்தட்ட 60 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவை நேற்று தொடங்கியது.
சென்னையில் இருந்து முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. அப்போது தமிழக அரசின் அறிவுறுத்தல்படி, பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனைகள், முகக்கவசங்கள் அணிதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்பட்டன.
விமான சேவை தொடங்கி உள்ள நிலையில் விமான நிலையங்கள் வரும்ப பயணிகளுக்கு மற்றொரு ஏற்பாட்டை தமிழக அரசு செய்துள்ளது. விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றி செல்வதற்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.