fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் – முதல்வர் உட்பட பலர் அவரது நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதனால் சென்னை மெரினாவில் அமைந்துள்ள ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கட்சி தலைவரும் , முதல்வருமான எடப்பாடி பழனிசாமி , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , அமைச்சர்கள் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்த இன்று காலை , சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அண்ணாசிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

அதனால் அப்பகுதியில் வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதால் , பல போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாளர்கள்தூவி மரியாதையை செலுத்தினர்.

இவ்வாறு தமிழகம் முழுவதும் ஜெயலலிதா நினைவுநாள் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close