RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
இந்தியாவிலேயே முதலில் சென்னையில் தான் மின்சாரத்தில் இயங்கும் கார் அறிமுகம் – அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
மின்சாரத்தில் இயங்கும் காரை இந்தியாவிலேயே முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது;
முந்தைய காலங்களில் தமிழகத்தின் வலியுறுத்தலால் , பல பொருட்களின் வரி குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மின்சாரத்தால் இயக்கப்படும் கார்களை ஊக்குவிப்பதற்கு , அதன் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.
இந்நிலையில் இந்தியாவிலேயே மின்சாரத்தில் இயங்கும் காரை முதல்முதலில் சென்னையில் தான் அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது. வரி குறையும் போது அதிகஅளவில் பேட்டரி கார்கள் பயன்பாட்டிற்க்கு வரும் என தெரிவித்தார்.