RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
எனக்கு எதாவது நேர்ந்தால் ஆந்திரா பற்றி எரியும் – சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ஆந்திர மாநிலத்தின் புதிய முதல் மந்திரியாக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு முன்னாள் முதல்-மந்திரியாக பதவிவகித்து வந்த சந்திரபாபு நாயுடுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வசதிகள் குறைத்துவிடபட்டது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேசியதாவது ;
என் உயிருக்கு ஆபத்துள்ளது என தெரித்தும் ஆளும் கட்சி அரசு என் பாதுகாப்பை குறைத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி அரசு எனக்கு தகுந்த பாதுகாப்பை அளிக்கவில்லை. என் உயிரை வைத்து இந்த அரசு விளையாட்டை காட்டிக்கொண்டுள்ளது.
இதனால் என் உயிருக்கு எதாவது ஆபத்து ஏற்பட்டால் அரசை யாரும் கட்டுப்படுத்த முடியாது. ஆந்திர மாநிலமே பற்றி எரியும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.