‘கொரோனா’புரமான ராயபுரம்…! ஒரே நாளில் செஞ்சுரியை தாண்டி ஷாக்…!
Huge corona cases in Chennai royapuram
சென்னை: தலைநகர் சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 676 ஆக அதிகரித்துள்ளது.
கோயம்பேட்டுக்கு முன்னதாகவே கொரோனா மையமாக இருந்து வருகிறது சென்னையின் ராயபுரம். தொடக்கத்தில் இருந்தே கொரோனாவின் மையப்புள்ளியாக இருக்கிறது.
சென்னையில் மட்டும் 3839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 105 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
2வது இடத்தில் கோடம்பாக்கத்தில் 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவிக நகரில் இதுவரை 556 பேர் பாதிப்படைந்துள்ளனர். ஒரே நாளில் அங்கு 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தேனாம்பேட்டையில் 412 பேர், வளசரவாக்கத்தில் 319 பேர், அண்ணா நகரில் 301 பேர், தண்டையார் பேட்டையில் 274 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்பு குறைவாக இருந்த அம்பத்தூர் மண்டலத்தில் தற்போது இரட்டை சதத்தை தாண்டி 205 பேராக உள்ளது. அடையாறில் 175 பேர், திருவொற்றியூரில் 84 பேர், மணலியில் 42 பேர், மாதவரத்தில் 54 பேருக்கு கொரோனா உள்ளது.
ஆலந்தூரில் 29 பேரும், பெருங்குடியில் 36 பேரும் சோழிங்கநல்லூரில் 28 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் பாதிப்பு உச்சக்கட்டத்தை எட்டி இருப்பது, சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சியை தந்திருக்கிறது.