fbpx
GeneralRETamil NewsTrending Nowசந்தைதமிழ்நாடு

தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு…! சவரன் ரூ.592 உயர்ந்து 39,824க்கு விற்பனை!

Gold rate got high today

சென்னை:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

இன்று 7வது நாளாக தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு 74 அதிகரித்து ஒரு கிராம் 4978க்கும், சவரனுக்கு 592 அதிகரித்து ஒரு சவரன் 39,824க்கும் விற்கப்பட்டது.

விலை இவ்வாறு உயர்ந்தால் இன்னும் ஓரிரு தினங்களில் சவரன் 40 ஆயிரத்தை கடந்து விடும் என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.  மேலும் 50 ஆயிரத்தை தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.

கிராம் 5 ஆயிரத்தை நெருங்கி வருவதால் இனி தங்கம் கூட வாங்க முடியாதோ? என்று நகை வாங்குவார் நினைக்க தொடங்கியுள்ளனர். சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.3.90 அதிகரித்து ரூ.70.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close