GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா…! நாளை ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!
Edapaddi palanisamy meeting collectors tomorrow
சென்னை:
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் உள்ளது.
அதன் பரவலை தடுக்கும் விதமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வரும் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மதுரைக்கும் 30ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா உச்சத்தில் உள்ளதையடுத்து, நாளை காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
காணொலி மூலம் ஆலோசனை நடக்கிறது. அதனை தொடர்ந்து முக்கிய முடிவுகள் வெளியாகும் என்று தெரிகிறது. அநேகமாக மேலும் பல மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது.