ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு !
சென்னை:
தமிழகத்தில் ஜூன் 30 வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சில கட்டுப்பாடுகளுடன் மேலும் பல கட்டுப்பாடு தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
மறு உத்தரவு வரும்வரை தமிழகத்தில் வழிப்பாட்டுத் தலங்களைத் தலங்களை திறக்கத் தடை நீட்டிக்கப்படுகிறது.
நாளை திங்கள்கிழமை (ஜூன் 1) முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்கப்படுகிறது.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஜூன் 30 வரை தடை நீடிக்கிறது.
பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்க இ-பாஸ் தேவை ரத்து செய்யப்படுகிறது.
நாளை முதல் பொது போக்குவரத்தை நடைமுறைப்படுத்த மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
பேருந்துகளில் 60% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அரசின் வழிபாட்டு நடைமுறைகளை பின்பற்றி பொதுபோக்குவரத்திற்கான பயணிகள் பேருந்துகள் இயக்கப்படும்.
மண்டலங்களுக்கு இடையே பயணிக்க இ- பாஸ் தேவையில்லை. வெளி மாநில பயணங்கள், மண்டலங்களிடையே சென்று வர இ- பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 30- ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தருமபுரி,வேலூர், திருப்பத்தூர்,ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பொதுபோக்குவரத்து அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்படுகிறது.
காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
வாடகை கார்கள் மூன்று பயணிகளுடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.
ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரு பயணிகள் வரை பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
வணிக வளாகங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றை திறப்பதற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.
ஜூன் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி கூடங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களை திறக்கவும் தடை நீட்டிக்கப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள் இணைய வழிக்கல்வி கற்றலை தொடரவும்; அதனை ஊக்கப்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பார் கூட்ட அரங்குகளை திறப்பதற்கு தடை நீட்டிக்கப்படுகிறது.
திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும்.
திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்க அனுமதி.அதற்கு மேல் பங்கேற்கக் கூடாது.
இறுதி நிகழ்ச்சிகளில் 20 பேர் பங்கேற்கும் அனுமதி தொடர்கிறது.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் 20% பணியாளர்கள் அதிகபட்சம் 40 பேருடன் இயங்கவும், 50% ஊழியர்களுடன் அனைத்து தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
இயன்றவரை பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கவும், கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்த பிற பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
ஏசி வசதியைப் பயன்படுத்தாமல் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய கடைகளைத் திறக்கவும், வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதிப்படுத்த வேண்டும். இது சாத்தியமா என்று தெரியவில்லை.
ஜூன் 8- ஆம் தேதி முதல் உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்தவும், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் உணவகங்களில் குளிர்சாதன இயந்திரங்கள் இருந்தால் அவை இயக்கப்படக் கூடாது.
தேநீர் கடைகளில் 50% அளவு மட்டும் வாடிக்கையாளர் அமர்ந்து தேநீர் அருந்தவும் அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன்கள், அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.