தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம்…! வழக்கை டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்!
Corona treatment fees for private hospitals, case dismissed
சென்னை:
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது.
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு 8,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகவும், சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அந்த பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது
இந் நிலையில் இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இதுபோன்ற வழக்கு உள்ளதால் தலையிட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும் தனியார் மருத்துவமனையில் 50% படுக்கைகளும் ஒதுக்குமாறு விடுத்த கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.