fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் இ-பாஸ் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தியதாக தகவல்…?

Corona E pass stopped sources said

சென்னை:

சென்னையில் இ பாஸ் வழங்குவதை தமிழக அரசு நிறுத்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு தேசிய ஊரடங்கை அறிவித்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 5ம் கட்டமாக ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 5ம் கட்ட ஊரடங்கின் போது தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இ பாஸ் எடுக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு இபாஸ் வழங்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close