GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
கொரோனா தடுப்பு பணி தீவிரம்…! 3 மாவட்டங்களுக்கு முதல்வர் பயணம்!
CM edapaddi palanisamy 3 districts visit today
சென்னை:
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இன்று முதல் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் சுற்று பயணம் செல்கிறார்.
தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வகையில் தளர்வுடன் கூடியஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனவை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு செய்யவுள்ளார். இதைத்தொடர்ந்து, நாளை சேலத்திற்கும் , நாளை மறுநாள் ஈரோட்டிற்கும் முதலமைச்சர் பயணம் மேற்கொள்கிறார்.
பயணத்தின் போது அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், பல்வேறு திட்டப் பணிகளையும் நேரடியாக பார்வையிட்டு திறந்து வைக்கவுள்ளார்.