சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து…! விமான நிறுவனங்கள் அறிவிப்பு!
Chennai to Madurai flight service cancelled
சென்னை:
சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் மிக அதிகமாக இருப்பதன் காரணமாக ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் அத்தியாவசிய தேவை உள்ள கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை திறந்திருக்கும்.
இந் நிலையில் இந்த நான்கு மாவட்டங்களில் தவிர வேறு சில மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து இன்னும் ஒரு சில மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியானது.
அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒன்றில், மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடைபிடிக்கப்படும் நிபந்தனைகள் மதுரைக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மதுரை மட்டுமன்றி தூத்துக்குடி மற்றும் திருச்சி செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.