ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு
கொரோனா பரிசோதனையில் சென்னை தான் டாப்…! சென்னை ஆணையர் தகவல்!
Chennai corporation commissioner prakash press meet
சென்னை:
இந்திய அளவில் அதிக பரிசோதனைகள் சென்னையில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
நாள்தோறும் 15,000 வரை பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. மக்கள் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஒருமுறை வெளியே சென்றால் 10 நாளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ளுங்கள். பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வர 4,92,149 பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
கொரோனா இறப்பை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்காமல் முதியோர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் இறப்பு விகிதம் குறைந்தது. இன்னும் 3 மாதங்களுக்கு கட்டாயம் முகக்கவசம் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றார்.