ChennaiGeneralTamil NewsTrending Nowதமிழ்நாடு
சென்னை கூத்து…! கொரோனா பாதித்த சிறுவன் தப்பியோட்டம்…!
Chennai corona Youngman escaped
சென்னை:
சென்னையில் கொரோனா சிகிக்சையில் இருந்த சிறுவன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிவிட்டார்.
சென்னையில் கொரோனா பாதிப்புகள் மிக தீவிரம் அடைந்துள்ளது. தலைநகர் மட்டும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதித்து, சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் 35 சிறுவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் தண்டையார் பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் அவர்களில் ஜார்க்கண்டை சேர்ந்த 17 வயது சிறுவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தப்பி சென்ற சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.