fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஒரே நாளில் 2000 வாகனங்கள் பறிமுதல்…! சென்னையில் போலீசார் அதிரடி!

Chennai 1st lockdown police action

சென்னை:

முழு முடக்கத்தின் முதல் நாளில் சென்னையில் 2000 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் தலைநகர் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிக அதிகம்.

இதை கட்டுப்படுத்த நேற்று முதல் 4 மாவட்டங்களில் வரும் 30ம் தேதி வரை முழு முடக்கம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, போலீசார் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

ஆனாலும் காவல்துறையின் எச்சரிக்கையை மீறி சென்னையில் வாகனங்களில் சென்றதாக 2000 வாகனங்கள் முதல் நாளே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வாகனங்களில் சென்றது, முகக்கவசம் அணியாமல் இருந்தது, காரணம் இல்லாமல் தெருவில் சென்றது என மொத்தம் 2 ஆயிரத்து 346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வட சென்னையில்தான் அதிகமான வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close