ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
சாத்தான்குளம் இரட்டை கொலை…! விசாரிக்க தயார் என்று சிபிஐ ஒப்புதல்!
CBI ready to probe sathankulam double murder case
சென்னை:
சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ ஒப்புதல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விவரத்தை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.