fbpx
RETamil News

தமிழகத்தில் இன்று மட்டும் 66 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!!

சென்னை:

தமிழகத்தில் இன்று (ஏப்ரல்.,25) மேலும் 66 பேர் புதிதாக கொரோனா  வைரஸ் பாதிப்புக்குள்ளானார்கள்.

இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்தது.

சென்னையில் இன்று ஒரு நபர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 23 ஆனது.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  செய்தியாளர் சந்திப்பின் போது கூறியதாவது:

தமிழகத்தில் இன்று மேலும் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதில் 38 ஆண்களும், 28 பெண்களும் அடங்குவர்.

இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 34ல் இருந்து 41 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 7,707 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன.

இன்று மட்டும் தமிழகத்தில் 94 பேர் கொரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்தம் குணமானோர் எண்ணிக்கை 960 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 835 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று  34 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 23 ஆனது.

இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close