பெருங்காயத்தின் நன்மைகள் – உன் சமையலறையில் பகுதி 5
Benefits of Hing - In your Kitchen Part 5
நம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்துக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. அதன் பல பெயர்களில் ஒன்றை கேட்டால் உங்களுக்கு அறுவெறுப்பாக இருக்கலாம். ஆனாலும், நான் அதை குறிப்பிடத்தான் போகிறேன். நீங்கள் வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு ஒரு வரி தள்ளி செல்லவும். பெருங்காயத்தின் நன்மைகள் வெளிவருவதற்கு முன் அது பரப்பிய மணத்தால் பதறிப் போன அயல்நாட்டவர் அதை பேயின் மலம் என்று அழைத்தார்கள். முகத்தை சுளிக்கிறீர்களே, இதற்காகத்தான் அந்த வரியை கண்ணை மூடிக் கொண்டு கடக்க சொன்னேன். ஆனால், அதே பெருங்காயம் 1918-ல் உலகை ஆட்டிப்படைத்து, இலட்சக்கணக்கான மக்களை கொன்ற Spanish flu-வை குணமாக்க பயன்பட்டதால் அதை கடவுளின் உணவு என்று அழைக்கத் தொடங்கினர். பேயின் மலத்தையும் யாரும் பார்க்கவில்ல; கடவுளின் உணவையும் யாரும் பார்க்கவில்லை. ஆனால், பெருங்காயத்தின் நன்மைகளை அனைவரும் உணர்ந்திருக்கலாம். பெருங்காயத்தின் நன்மைகள் என்னவென்று பட்டியல் போட்டால் அது நீண்டு கொண்டே போகும். நன்மைகள் சரி, இப்படி பேர் வாங்கிய உணவு எப்படி இருக்குமோ என்று கவலைப்படுபவர்கள் எங்கள் தமிழ்நாட்டின் ரசத்தை குடித்து பார்க்க வேண்டும். மிளகு, சீரகம், பெருங்காயம் சுவை கலந்த ரசத்தை அடித்துக் கொள்ளவே முடியாது.
பெருங்காயத்தின் நன்மைகள்
பெருங்காயம் இல்லாத அஞ்சறை பெட்டியை நீங்கள் காணவே முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு தமிழரின் சமையலில் பெருங்காயம் இடம் பெற்றிருக்கிறது. பெருங்காயத்தின் பலன்கள் என்ன என்று பார்ப்போம்.
பெருங்காயத்தின் மருத்துவ பலன்கள்
- வாயுக் கோளாறுகளை சரி செய்கிறது
- வயிற்று உப்புசத்தை போக்குகிறது
- Irritable bowel syndrome-ஐ தணிக்க உதவுகிறது
- சீரணத்தை மேம்படுத்துகிறது
- சளியை போக்க உதவுகிறது.
- அதிக இரத்த அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
- இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்குகிறது
- ஆஸ்துமாவை போக்க உதவுகிறது.
- தலைவலியை போக்குகிறது
- காதுவலியை போக்க உதவுகிறது
- நரம்புகளை பலப்படுத்துகிறது
- கர்ப்பபையில் நீர்க்கட்டி ஏற்படாமல் தடுக்கிறது
- மாதவிடாய் கோளாறுகளையும் வலியையும் சரி செய்கிறது
- பிரசவித்த பெண்களின் கருப்பையில் உள்ள அழுக்கு விரைவில் வெளியேற உதவும்.
- பூச்சிக்கடியை குணமாக்குகிறது
- பற்களை பலப்படுத்துகிறது
- பெருங்காய நீர் எலும்புகளை பலப்படுத்துகிறது
- பெருங்காய் நீரை தொடர்ந்து பருக இரத்த சோகை தீரும்.
முக்கிய குறிப்பு
பெருங்காயத்தை மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை
நம் அன்றாட உணவில் பெருங்காயத்தை பயன்படுத்துவதோடு கீழ்க்கண்ட வழிகளில் பயன்படுத்தி பெருங்காயத்தின் நன்மைகள் அனைத்தையும் நீங்கள் பெறலாம்.
ஒரு டம்ளர் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை தூவி மூடி வைக்கவும். 5 முதல் 10 நிமிடம் கழித்து அதை பருகவும்.
சிறிது எலுமிச்சை சாறுடன் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை பெருங்காயத்தூளை சேர்க்கவும். இதை லேசாக சூடுபடுத்தவும். ஒரு சிறு பஞ்சு உருண்டையால் ஒற்றி பல்வலி இருக்கும் இடத்தில் வைக்கவும்.
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்த்து, கலக்கி, பருகவும்.
அழகை மேம்படுத்தும் பெருங்காயம்
இதை சிலர் கற்பனை செய்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். பெருங்காயத்தினால் உங்கள் தோற்றத்துக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்:
- கூந்தல் உதிர்வை தடுக்கிறது; கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.
- முகப் பொலிவை அதிகரிக்கிறது
- முகத்தில் உள்ள தழும்பையும் கரும்புள்ளிகளையும் போக்க உதவுகிறது.
- சரும வறட்சியை போக்குகிறது.
பயன்படுத்தும் முறை
பெருங்காயத் தூளோடு சிறிது தண்ணீர் அல்லது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
சிறிது பாலுடன் பெருங்காய தூளை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் பூசி காய விடவும். சுமார் அரை மணி நேரம் கழித்து முகம் கழுவவும்.
தயிரோடு பெருங்காயத் தூள் கலந்து கூந்தலில் பூசவும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.