fbpx
REtestஇந்தியாதமிழ்நாடு

தென் கொரியாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பிசிஆர் கருவிகள்!

pCR test kits from South korea

தற்பொழுது தமிழக மருத்துவ பணிகள் கழகத்திடம் 4 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் சுமார் 1.6 லட்சம் பசிஆர் கருவிகள் உள்ளன. இவை அனைத்தையும் சேர்த்து தமிழகத்தில் சுமார் 5.6 லட்சம் பசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்னும் நிறைய கருவிகள் தேவைப்படும் என்பதால் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரியாவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக சுமார் 15 லட்சம் பிசிஆர் கருவிகள் இந்தியா நோக்கி வந்தடைந்துள்ளன.

இதனை தொடர்ந்து கூடுதலாக சுமார் 10 லட்சம் கருவிகள் வாங்க புதிய ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளது. இதன்படி சுமார் 1 லட்சம் பசிஆர் கருவிகள் ஜெர்மனியில் இருந்தும், 7 லட்சம் கருவிகள் தென் கொரியாவில் இருந்தும் மற்றும் ஒரு லட்சம் கருவிகள் அமெரிக்காவில் இருந்தும் விரைவில் வர உள்ளதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் முன்னரே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கருவியால் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் தென் கொரியாவில் இருந்து ஆர்டர் செய்யப்பட சுமார் ஒரு லட்சம் பசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஆர்டர் செய்யப்பட்ட இதர கருவிகள் அடுத்த மூன்று வாரத்தில் தமிழகம் வந்தடையும் என கூறப்படுகின்றது.

Tags

Related Articles

Back to top button
Close
Close