fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிவு..! வங்கிகள் இன்று முதல் இயங்கும்!

Bank will be open from today

சென்னை:

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிந்ததால் இன்று முதல் மாலை 4:00 மணி வரை வங்கிகள் வழக்கம் போல செயல்படும்.

இந்த மாவட்டங்களில் வங்கிகள் 4ம் தேதி வரை 33 சதவீத ஊழியர்களுடன் காலை 10:00 முதல் பகல் 2:00 மணி வரை இயங்கின. பெட்ரோல் நிலையங்கள் காஸ் ஏஜன்சி போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கக் கூடிய வினியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களிடம் ரொக்கப் பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

பொது மக்களுக்கு நேரடி வங்கி சேவை வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று முதல் வங்கிகள் வழக்கம் போல செயல்பட உள்ளன. வங்கி அதிகாரிகள் கூறியதாவது:

மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 12ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதால் அந்த பகுதிகளில் வங்கிகள் செயல்படும் நேரம் குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close