RETamil NewsTrending Nowஉணவுதமிழ்நாடு
தமிழகத்தில் நாளை (08-06-2020)முதல் ஹோட்டல்களில் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட அனுமதி!
ஹோட்டல்களில் நாளை முதல் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்,
தமிழகத்தில் உணவகங்கள் செயல்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,
- ஹோட்டல்களின் வாயிலில் தெர்மல் ஸ்கிரீனிங் கருவி இருக்க வேண்டும்.
- கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும்.
- ஏ.சி. பயன்படுத்தக்கூடாது,
- கழிவறைகளை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
- 50% இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி.
- ஒரு டேபிளுக்கும் மற்றோரு டேபிளுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருத்தல் வேண்டும்.
- பண பரிவர்த்தனையை தவிர்த்து, கூடுமான வரை இணைய வழி பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
- ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்
- வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் நிலை சரியில்லாத ஊழியர்களை பணி அமர்த்தக்கூடாது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.