fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

அதிமுக-வுடன் கூட்டணி சேர்ந்தது தேமுதிக!

நீண்ட நாட்கள் குழப்பத்திற்கு பின் அதிமுக – தேமுதிக கூட்டணி இணைவது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளின் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் உறுதிசெய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிமுக – தேமுதிக கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளிடையேயும் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின்னர் முதல்வர் பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.மேலும் 21 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுகவிற்கு தேமுதிக ஆதரவு அளிக்கும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தொடர்பான ஆலோசனை மேற்கொண்ட பின்புதான் முடிவு செய்யப்பட்டு , பின்னர் அறிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close