ஜூலை 4ம் தேதி முதலமைச்சர் சாத்தான்குளம் பயணம்…? வெளியான புதிய தகவல்!
CM edapaddi palanisamy may go to sathankulam
சென்னை:
சாத்தான்குளம் செல்லலாமா என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பலியானது, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இருவரையும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால், அவர்கள் இறந்தனர். இது தொடர்பாக, கொலை வழக்கு பதிவு செய்து, தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, நீதிமன்றமும் நேரடி விசாரணை மேற்கொண்டுள்ளது. இவ்வழக்கை, சிபிஐ வசம் ஒப்படைக்கப் போவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெயராஜ் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற, முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதல்வர் இ.பி.எஸ்., – துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், 4ம் தேதி, சாத்தான்குளம் செல்லலாம் என, தெரிகிறது.