GeneralRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு
சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளராக வட்டாட்சியர் நியமனம்…!
Sathankulam station RI appointed
தூத்துக்குடி:
சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் இரட்டை மரணம் தொடர்பாக விசாரிக்க வந்த நீதிபதிக்கு காவல்துறை ஒத்துழைப்பு அளிக்கவில்லை. இதையடுத்து, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
நீதிபதி விசாரணைக்கு இடையூறாக இருந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
இந் நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய பொறுப்பாளராக சமூக நலத்துறை வட்டாட்சியர் செந்தூர் ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேகரிக்கும் பணியில் வட்டாட்சியர் செந்தூர் ராஜ் ஈடுபடுவார்.