பிறந்த நாளில் எடப்பாடிக்கு கிடைத்த ஏமாற்றம்….! என்ன தெரியுமா…?
Train services resumed Chennai, CM edapaddi palanisamy dissatisfied
சென்னை: ரயில் சேவையை தொடர வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8000ஐ கடந்துவிட்டது. ஆகையால் மே 31 வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளை சென்னையில் இருந்து அனுமதிக்கக் கூடாது என்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையாக இருந்தது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக விடுவிக்க வேண்டும். ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவைகளை சென்னையில் வரும் 31 வரை அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பலவும் அவரது கோரிக்கைகளாக இருந்தது.
ஆனால் அவரது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இன்றே சென்னையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில் தமது சேவையை தொடங்குகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் நிராகரித்து ரயில்களை இயக்குகிறது.