சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ–குற்றச்சாட்டு
ஜந்தர் மந்தரில் நடக்கும் இந்த போராட்டத்துக்கு, லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் ஆதரவு தெரிவித்தார். கடந்த மாதம் 28ல் போராட்டக் களத்திற்கு வந்த அவர், உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.டல்நிலை மிகவும் மோசம் அடைந்ததை அடுத்து, போராட்டம் நடந்த இடத்தில் இருந்து அவரை சமீபத்தில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கும்அவர்உண்ணாவிரதம்இருந்துவந்தார்.பா.ஜ.,வைச்சேர்ந்தமத்தியஅமைச்சர்கள்நட்டா,ஜிதேந்திரசிங்ஆகியோர்முன்னிலையில்,26நாள்போராட்டத்தைநேற்றுமுன்தினம்இரவுஅவர்முடித்துக்கொண்டார்.இந்நிலையில், சோனம் வாங்சுக்உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டது குறித்து, அவரின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோநேற்றுகூறியதாவது:போராட்டத்தில்ஈடுபடுபவர்களுக்கு சட்ட ரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதியளிக்க வேண்டும் என, சோனம் வாங்சுக் வலியுறுத்தி உள்ளார்.ஏனெனில், போராட்டம் நடத்துவது அவர்களின் அரசியலமைப்பு உரிமை. மிகுந்த அமைதி, மன உறுதி மற்றும் பொறுமையுடன் அவர்கள் போராடி வருகின்றனர். உலகின் பிற இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இவர்கள் முன்மாதிரியாக திகழ்கின்றனர். இந்த சூழலை பயன்படுத்தி, தங்கள் சொந்த நலன்களை புகுத்தவும், போராட்டத்தை கெடுக்கவும் தீய சக்திகள் முயன்று வருகின்றன.அத்தகைய சக்திகளை அடையாளம் காண, மத்திய அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும். மாணவர்களின் அனைத்து போராட்டங்களையும் கண்ணியமான முறையில் அணுகிய மத்திய அரசுக்குநன்றி. இவ்வாறு அவர் கூறினார்.