ஆட்சியில் இருந்தும், அரசியலில் இருந்தும் மோடியை தூக்கி எறியுங்கள்-மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு
வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி மேற்கு வங்காள மாநிலம் நகரகடாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், பா.ஜனதாவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மோடி தன் ஆட்சியில் நான்கரை ஆண்டுகளாக உலகம் சுற்றிக்கொண்டிருந்தார். விவசாயிகளையோ அல்லது நடுத்தர மக்களையோ கவனிக்கவும் இல்லை, சந்திக்கவும் இல்லை. பணமதிப்பு நீக்கத்தின் போது மக்கள் மரணமடைந்த போதும் சரி, விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோதும் சரி அவர் என்ன செய்து கொண்டுருந்தார்? இப்போ தேர்தல் காலம் நெருங்கி வந்தவுடன் , அவர் எல்லோரையும் சந்தித்து கொண்டிருக்கிறார், பொய் சொல்லிக்கொண்டிருக்கிறார்.
பொய் சொல்வதில் போட்டி ஒன்று வைத்தால் அவருக்கு தான் முதல் பரிசு கிடைக்கும். இப்படி பொய் சொல்லும் பிரதமரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. மேலும் மக்கள் அவர் பொய் சொல்ல முடியாத அளவிற்கு பிளாஸ்திரி ஓட்டுவார்கள் என்று கூறினார்.
மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி கூறிய மம்தா பானர்ஜி , நாட்டின் நலனுக்காக , பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து மட்டுமின்றி, அரசியலில் இருந்தும் தூக்கி எறியுங்கள் என்று கூறியுள்ளார்.