நோட் பண்ணிக்கோங்க… இந்த மாவட்டங்களில் மழை வெளுக்க போகுதாம்…!
8 districts may get heavy rain
சென்னை:
நீலகரி, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக சில நாட்களாக மழை கொட்டி வருகிறது. இந் நிலையில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருத்தணியில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தின் ஓகேனக்கல் பகுதியில் 7 சென்டி மீட்டர் மழையும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டு உள்ளது.