தமிழகத்தின் 3 முக்கிய நகரங்களில் வீரியம் காட்டும் கொரோனா….!
3 cities in tamilnadu heavy corona cases
டெல்லி:
தமிழகத்தில் உள்ள 3 நகரங்களுடன் நாடு முழுவதும் 13 நகரங்களில் அதிக கொரோனா நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.13 நகரங்களில் மட்டுமே நாட்டின் 70 சதவீத கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஐதராபாத், கொல்கத்தா, ஹவுரா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 13 பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகம்.
இந்த பகுதிகளின் மாநகராட்சி ஆணையாளர்கள், ஆட்சியர்கள் ஆகியோருடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி இருக்கிறது. அப்போது அடுத்து எடுக்கப்பட வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
நோய்த்தொற்று வீதம், 10 லட்சம் பேரில் எத்தனை நபர்களுக்கு பரிசோதனை என்பன உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.