சென்னை மக்களை அதிர வைக்கும் கொரோனா செய்தி…! 24 மணி நேரத்தில் 22 பேர் பலி!
22 deads due to corona in Chennai
சென்னை:
சென்னை மக்களுக்கு பேரதிர்ச்சியாக 24 மணி நேரத்தில் 22 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களாகவே சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஏழு பேர், ஓமந்தூரார் மருத்துவமனையில் நான்கு பேர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் எட்டு பேர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் இரண்டு பேர், வீட்டில் சிகிச்சை பெற்று வந்த ஐடி ஊழியர் ஒருவரும் என மொத்தம் 22 பேர்கள் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.
மேலும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 6 மண்டலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ராயபுரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிகம் பாதிக்கப்பட்ட 6 மண்டலங்களில் ராதாகிருஷ்ணன் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் தினந்தோறும் இந்த ஆறு மண்டலங்களில் ஆய்வு செய்து வருகிறது.