fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

ரயில் படிக்கட்டில் பயணித்தால் பாஸ் ரத்து! – ரயில்வே நிர்வாகம் அதிரடி!

சென்னை: சென்னை புறநகர் ரயில்வண்டிகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்பவர்களின் பயணப் பாஸை ரத்து செய்ய தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

கடந்த 24ஆம் தேதி சென்னை பரங்கிமலை பகுதியில் புறநகர் ரயில்வண்டி ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விபத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பொதுமக்கள் ரயில்களின் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதை தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் இது தொடர்பாக பேசிய ரயில்கள் பாதுகாப்பு படை ஆணையர் லூயிஸ் அமுதன் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close