fbpx
RETamil News

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 2 நாட்களுக்கு ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் ராமநாதபுரம், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் 1.0 முதல் 1.5 வரையிலான அளவுக்கு கடல் அலைகள் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகம் வழியாக இலங்கை கடற்கரை வரை, வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

 

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 13 சென்மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கரூர் பஞ்சப்பட்டியில் 10 சென்டிமீட்டர் மழையும், காரைக்கால் பகுதியில் தலா 8 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close