GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு
மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு..! எத்தனை நாட்கள் தெரியுமா?
TNEB extend bill payment
சென்னை:
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின்வாரியம் வரும் ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
கொரொனா காலகட்டத்தில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது.
இந் நிலையில் தமிழகத்தில் சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜூலை 5 வரை மின்கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு நாட்கள் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.