மதுக்கடைகளை திறக்க திமுக தான் காரணம்…! அமைச்சர் கருத்து
DMK reason for tasmac opening says minister jayakumar
சென்னை: திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் அவை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த அறிவிப்பிற்கு திமுக உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் மது விற்பனை தொடங்குவதற்கு எதிராக திமுக அறிக்கை விடுத்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தனது வீட்டு வாசலில் கருப்பு சட்டை அணிந்து வந்து நின்றார். அவரோடு உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி துர்கா ஆகியோரும் வந்து நின்றனர்.
இந் நிலையில், சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது இதுகுறித்து கூறியதாவது: அதிமுகவானது மக்கள் நலனை கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் திமுக மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறது. மேலும், திமுகதான் மதுவிற்பனைக்குக் காரணம் என்று தெரிவித்தார்.