fbpx
Others

ஜப்பான் — சதை உண்ணும் அரக்கன் உயிர் கொல்லி பாக்டீரியா…செய்தி.

ssts bacteria

 கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவே உலக நாடுகள் தவித்து வரும் நிலையில், தற்போது அதை விட கொடூரமான பாக்டீரியா ஒன்று ஜப்பானில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கொரானோ வைரஸ் தாக்கினாலாவது உயிரிழப்பு நேரிட ஒரு வாரம் ஆகும் நிலையில், இந்த ஜப்பான் பாக்டீரியா தாக்கினால் 48 மணிநேரத்திலேயே உயிர் போய்விடும் என்பதுதான் உலக நாடுகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டின் இறுதிவாக்கில், சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்த உலகையே ஆட்டிப் படைத்ததை யாராலும் மறக்க முடியாது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பேரும், இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கானோர் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகினர்.  இந்த கொரோனா பெருந்தொற்று பரவல் கடந்த 2022-ம் ஆண்டு தான் முழுவதுமாக நின்றது. ஆனால், இன்றளவும் சில நாடுகளில் கொரோனா பரவல் இருக்கிறது. ஆனால், வீரியம் குறைந்த கொரோனா வைரஸாக அவை மாறிவிட்டதால் பெரிய அளவில் பயம் இல்லை என்று கூறப்படுகிறது.கொரோனா வைரஸ் அச்சத்தில் இருந்து இப்போதுதான் உலகம் மீண்டும் பெருமூச்சு விடும் நிலையில், ஜப்பானில் இருந்து வரும் செய்திகள் பெரும் பீதியை கிளப்பி இருக்கின்றன. ஜப்பானில் STSS அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் என்றழைக்கப்படும் கொடூரமான சதை உண்ணும் பாக்டீரியா மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூன் 2-ம் தேதி வரை 977 பேருக்கு இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த STSS பாக்டீரியா ஒருவரை தாக்கினால், அவர்களின் சதையை உண்ண ஆரம்பித்துவிடும். உடனடியாக இந்த பாக்டீரியா தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால், 48 மணிநேரத்தில் ( 2 நாட்கள்) உயிரிழப்பு ஏற்பட்டு விடும் என்பதுதான் இதில் பயமுறுத்தும் விஷயம்.இந்த பாக்டீரியா தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த பாக்டீரியா தாக்கினால் ஆரம்பத்தில் காய்ச்சல், தசை வலி, குமட்டல் போன்றவை ஏற்படும். இது ஆரம்பக்கட்ட அறிகுறிகள் தான்.இதனைகவனிக்காமல்விட்டுவிட்டால், ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டு, உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க துவங்கும். அதன் பிறகு இதயத்துடிப்பு அதிகரித்து மூச்சுத் திணறல் ஏற்பட்டு48மணிநேரத்திற்குள்  உயிர் பிரிந்துவிடும். உடலில் காயங்கள் இருப்பவர்கள், அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், காய்ச்சல் பாதிப்பு உள்ளவர், பூஞ்சை தொற்று பாதிப்பு உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், குழந்தைகள் ஆகியோரை இந்த பாக்டீரியா தாக்கும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த பாக்டீரியா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் வாய்ப்பு குறைவு என்பதுதான்.

Related Articles

Back to top button
Close
Close