ஈரோடு–போக்சோ சட்டத்தில்ஆசிரியர் கைது..
ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் அரசு மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரை, ஆங்கில ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி அவரது தாயிடம் தெரிவித்தார்.இதையடுத்து மாணவியின் பெற்றோர் பவானிசாகர் போலீசார் மற்றும் ஈரோடுசைல்ட்லைன்அமைப்பிடம்புகார்தெரிவித்தார்.போலீசார்மற்றும்சைல்ட்லைன்அமைப்பினர்ஆசிரியரிடம்விசாரணைநடத்தியதில்மாணவிகளுக்குசாக்லேட்கேக்உள்ளிட்டதின்பண்டங்கள்வாங்கிகொடுத்துபாலியல்தொல்லைகொடுத்ததாகதெரியவந்தது.இதையடுத்துமாணவியின் பெற்றோர் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என போலீசாரிடம் வலியுறுத்தினர்.இதுகுறித்த புகாரின்பேரில் பவானிசாகர் போலீசார்அரசுமேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஈரோடு, 46 புதூர் பகுதியை சேர்ந்த ஆசிரியர் தண்டபாணி, 55, மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து நேற்று முன் தினம் கைது செய்தனர். மாவட்ட நிருபர்சுரேஷ்குமார்