fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

திமுக தலைவர் கலைஞருக்கு மெரினாவில் இடம் வழங்க நீதிகமன்றம் உத்தரவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க நன்றி!

மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலை, மெரினாவில் அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.

இந்த செய்தி அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு அழுத நிகழ்வு.
அங்கு இருக்கும் தொண்டர்களை நெகிழச் செய்தது.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இந்நிலையில் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வதில் சட்டசிக்கல் இருப்பதாகவும், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

இந்த செய்தியை அறிந்த மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

Related Articles

Back to top button
Close
Close