fbpx
RETamil Newsஇந்தியா

டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும்

11 Districts of Delhi in RedZone!

டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களும் மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்று டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அவர்கள் இன்று அறிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வரை, தலைநகர் டெல்லியில் 3,738 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 61நபர்கள் இதுவரை இறந்துள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 223 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள், மே 17 வரை சிவப்பு மண்டலத்தில் இருக்கும் என்று ஜெயின் கூறினார். சிவப்பு மண்டலம் என்பது 10 க்கும் மேற்பட்ட (கொரோனா வைரஸ்) வழக்குகள் உள்ள ஒரு பகுதி என்றும் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டெல்லியில் இருந்து வேறு மாநிலங்களுக்கு சென்றுள்ள தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு அழைத்து வருவது குறித்து பேசிய அவர், அரசாங்கம் மற்ற மாநிலங்களுடன் பேசி வருவதாக கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close