fbpx
RETamil Newsதமிழ்நாடு

சென்னையில் நடந்தது சோக சம்பவம் ; ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் பலி !!!

சென்னையில் இன்று கிண்டி அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவைகளில் 2 பேர் மின்சார ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடைமேம்பாலத்தை பயன்படுத்தினால் நேரம் செலவாகும் என்பதால் சென்னையில் தண்டவாளத்தை கடக்க முயள்பவர்கள் மீது மின்சார ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவம் சென்னையில் அதிகரித்துள்ளது. அதனால் பயணிகள் ரயில் நிலைய தண்டவாளம் மற்றும் புறநகர்களில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க கூடாது என்றும் நடைமேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் சென்னையில் இன்று சைதாப்பேட்டை -கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளங்களை சிலர் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது. இவ்வாறு மோதியதில் 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை அவர்களின் விவரம் ஏதும் தெரியவில்லை.

Related Articles

Back to top button
Close
Close