fbpx
REவிளையாட்டு

இந்திய வெற்றியை கேரள மக்களுக்கு சமர்ப்பித்தார் கோஹ்லி !!!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் தோற்ற இந்தியா இந்த 3-வது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியை பெற்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை தற்போது உயிர்பெற செய்துள்ளது, இந்தியா. இன்று பெற்ற வெற்றியை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமர்ப்பிப்பதாக இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்தார்.

பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது, இந்தியா பெற்ற சிறப்பான வெற்றியை பற்றி கேப்டன் வீராட் கோஹ்லியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:

இந்த வெற்றியை, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமர்ப்பிக்க விரும்புகிறோம். அவர்கள் மிகுந்த கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றார் கோஹ்லி.

டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 97 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 103 ரன்களும் குவித்தார் கோஹ்லி.

மேன் ஆப் தி மேட்ச் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த போட்டித் தொடரை வெல்வதும் இந்திய அணிக்கு சாத்தியம் என கூறிய கோஹ்லி, தோல்வியால் துவண்டிருந்தால் 2 தோல்விகளுக்கு பிறகு இந்த வெற்றியை பெற்றிருக்க முடியாது என்றும், இந்திய அணி வீரர்கள் இந்த சாதனையை நிகழ்த்த திறன் படைத்தவர்கள் என்றும், கோஹ்லி தெரிவித்தார்.

Related Articles

Back to top button
Close
Close