RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது!
சென்னை:
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
சென்னை டிபிஐ அலுவலக வளாகத்தில் கடந்த 24ம் தேதி முதல் நீடித்து வந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து இடைநிலை ஆசிரியர் சங்க செயலாளர் ராபர்ட் கூறுகையில், பள்ளி கல்வி துறையின் எழுத்துப்பூர்வ உறுதியை ஏற்று ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்படுகிறது என்றார்.