RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
ஏழை மக்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதிஉதவி திட்டத்தை தடை செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
வறட்சி மற்றும் கஜா புயல் பாதிப்பு இந்த இரு காரணங்களையும் கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 60 லட்சம் ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த திட்டத்தை எதிர்த்து, உயர்நீதி மன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.