ஒரே ராத்திரி… 16 பேர் கொரோனாவுக்கு பலி…! பதறும் சென்னை!
16 dead due to corona in Chennai
சென்னை:
கொரோனாவால் தலைநகர் சென்னையில் ஒரே இரவில் 16 பேர் பலியாகி உள்ளனர்.
கொரோனா தொற்றால் நாள் தோறும் சென்னையில் பாதிப்பு ஆயிரத்தை கடந்து வருகிறது. நேற்று சென்னையில் அதிகபட்சமாக 1392 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
நேற்று ஒரே நாளில் 19 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந் நிலையில் சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 2 பேர், ஸ்டான்லி மருத்துவமனையில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் ஒருவர் பலியாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 48.8% பேர் குணமடைந்துள்ளனர். ஆனால் இறப்பு சதவிகிதம் 1% ஆக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.