fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

அரசு அலுவலகங்களுக்கு 2வது சனிக்கிழமை ஏன் விடுமுறை தெரியுமா..?

Why 2nd Saturday holiday government clarifies

சென்னை:

அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை கிருமி நாசினி தெளிப்பதற்காக விடுமுறை விடப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் கே சண்முகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

பொது முடக்க காலத்தில் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தொடா்பாக மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையன்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும்.

அன்றைய தினமும், மறு நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் அரசு அலுவலகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும்.

அன்றைய தினமும், மறு நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் அரசு அலுவலகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். இந்தப் பணிகள் மறுஉத்தரவு வரும் வரை தீவிரமாக தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close