fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

முதல்வர் எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் – ஜாக்டோ – ஜியோ

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்தல் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ அமைப்பின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதிலும் அரசு ஊழியர்கள் , மற்றும் ஆசிரியர்கள் இன்று 4-காவது நாளாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் நாகையில் நடத்தப்பட்ட போராட்டத்திற்காக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் விழிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் 2000-பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்ட ஜாக்டோ – ஜியோ அமைப்பின் பெண் ஊழியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் காமராஜர்சலையுள் உள்ள எழிலகம் முன்பு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 13 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 10 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.அதனால் அரசு அலுவலக பணிகளும், பள்ளிகளும் சரிவர நடைபெறாததால் , போராட்டத்தில் ஈடுபட்ட அந்த ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

போராட்டம் குறித்து ஜாக்டோ – ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்பரசன் கூறியதாவது ; 4-காவது நாளாக நடத்தப்படும் இந்த போராட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் எங்களை அழைத்து சந்தித்து பேசும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close