fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று வழக்கமாக நடைபெறும் கிராமசபைக் கூட்டம் ரத்து…! தமிழக அரசு அறிவிப்பு!

Village panchayat meeting cancelled

சென்னை:

சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் இப்போது  கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக  கிராம சபை கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.   ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பழனிசாமி, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close